சென்னை: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான 7 பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார். மருத்துவர்கள் அர்ச்சனா, பிரேமா, சினேகா ஸ்ரீ, ராமச்சந்திரன், டெக்னீசியன் நளினி ஆகியோ ஆஜராகியுள்ளனர். செவிலியர்கள் விஜயலட்சுமி, சில்பா உள்ளிட்டோரும் ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர்.