அகமதாபாத்: திறந்தவெளி கழிப்பிடமில்லா மாநிலமாக அறிவிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தில் இன்னும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவறை தேவை உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலம் திறந்தவெளி கழிப்பிடமில்லா மாநிலமாக மாற்றுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு, தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கியது. அதில் இருந்து பொதுமக்களுக்கு 32 லட்சம் கழிவறைகள் கட்டிக் கொடுப்பதற்காக ரூ.2,893 கோடியை குஜராத் அரசு செலவிட்டுள்ளது. இதில், 1,778.96 கோடி மத்திய அரசின் ஒதுக்கீடாகும். கடந்த பிப்ரவரி மாதம் மக்களவையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்கள் திறந்தவெளி கழிப்பிடமில்லா மாநிலங்களாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குஜராத் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கேட்டு சமூக ஆர்வலர் ஹிதேஷ் சாவ்தா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுத்தாக்கல் செய்தார்.