நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் அமைய இருக்கும் வர்த்தக துறைமுகம் தொடர்பாக, நாகர்கோவிலில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பேசாமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
கூறினார். நாகர்கோவிலில் மத்திய அரசின் ஆரோக்கிய பாரதம் பாதுகாப்பு திட்டத்தை (ஆயுஷ்மான் பாரத்) தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது :பிரதமர் மோடியின் முக்கிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நடிகர் கருணாஸ் கைது நடவடிக்கையை பொறுத்தவரை, பேசக்கூடிய பேச்சுக்கள், நடக்கும் நடத்தைகள் அதன் அடிப்படையில் சட்டம் செயல்படுகிறது.