புழல் சொகுசு வாழ்க்கை சம்பவம் எதிரொலி மதுரை மத்திய சிறையில் போலீஸ் திடீர் சோதனை: குட்கா, சிகரெட், சிக்கியது

மதுரை: சென்னை புழல் சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை சம்பவம் எதிரொலியாக மதுரை மத்திய சிறையில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.  சோதனையில் குட்கா, பீடி, சிகரெட் சிக்கியது.தமிழக சிறைகளில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக சில ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை உறுதிபடுத்தும் வகையில், சென்னை புழல்  சிறையில் எல்இடி டிவிக்கள், செல்போன்கள், கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. அங்குள்ள கைதிகள் சிலர், அதிகாரிகள் உதவியுடன் நட்சத்திர ஓட்டலில் உள்ளது போல சொகுசு வாழ்க்கை அனுபவித்து வந்தது விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து, சிறைகளில் சோதனை நடத்த சிறைத்துறை டி.ஜி.பி. அசுதோஷ்சுக்லா உத்தரவிட்டார். இதன்பேரில், சேலம், கோவை மற்றும் பாளை சிறைகளில் சோதனை  நடத்தப்பட்டது. மதுரை மத்திய சிறையில் நேற்று காலை சிறைத்துறை டிஐஜி பழனி தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமுள்ள 12 பிளாக்குகளிலும்  சோதனை நடத்தினர். சோதனையில், தடை செய்யப்பட்ட பொருட்களான குட்கா, பீடி, சிகரெட் மற்றும் புகையிலை, குத்தூசி, பிளேடுகள், இரும்பு துண்டுகள் போன்றவை சிக்கியது. நேற்று  அதிகாலை தொடங்கிய சோதனை சுமார் 2 மணிநேரம் நடந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: