சீர்மரபினர் எச்சரிக்கை 600 பேர் போட்டியிட்டு இடைத்தேர்தலை நிறுத்துவோம்

வத்தலக்குண்டு:  சாதிச்சான்றிதழ் வழங்காவிட்டால் திருப்பரங்குன்றம் தொகுதியில் 600 பேர் போட்டியிட்டு இடைத்தேர்தலை நிறுத்துவோம் என  சீர்மரபினர் நலச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே விருவீடுவில் சீரமரபினர் நலச்சங்கம் மற்றும் 68 சமுதாய அமைப்பினர் சார்பில் சாதி சான்றிதழ் கோரி நேற்று  ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சாதிச்சான்றிதழை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். இல்லாவிட்டால் திருப்பரங்குன்றம் தொகுதியில்  600 பேர் போட்டியிட்டு இடைத்தேர்தலை நிறுத்துவோம். விரைவில் இதை வலியுறுத்தி சென்னையில்  68 நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளோம்,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: