பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பல்லாவரம்: ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட 10 ஊராட்சி பகுதி மக்களுக்கான குறைதீர் கூட்டம், ஆலந்தூர் திமுக எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் தலைமையில், மாங்காடு அடுத்த கோவூரில் நேற்று நடைபெற்றது. இதில்,   நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை, மின்சார துறை, காவல்துறை மற்றும் போக்குவரத்துதுறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அய்யப்பன்தாங்கல், கோவூர், பெரிய பனிச்சேரி,  கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, சாலை, மின்சாரம், குடிநீர், தெருவிளக்கு மற்றும் ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட பிரச்னை  தொடர்பாக 400 புகார் மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  தொடர்ந்து, மழைக்கால முன்னேற்பாடு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. குன்றத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் படப்பை மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: