வேலியே பயிரை மேய்ந்த கதை.. மகளை பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த தாய்: கள்ளக்காதலனுடன் கைது

சென்னை: மகளை பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த தாயை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகா கன்னிகை போளூர் பகுதியை சேர்ந்தவர் விக்கி (44). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சக்தி (40). ஆந்திர மாநிலம், நகரி அக்ரஹாரம் பகுதியை வசித்து வருபவர் சக்தியின் அண்ணன்  ரவி. இவரது மனைவி சாந்தி (32). (அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், விக்கி தனது குடும்பத்தினருடன் அடிக்கடி ரவி வீட்டிற்கு சென்று  வந்துள்ளார். அப்போது, விக்கிக்கும், சாந்திக்கும் இடையே இருந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியது. இந்த தகவல் அறிந்ததும் சாந்தியை வீட்டை விட்டு ரவி துரத்தி உள்ளார். பின்னர், இருவரும் விவாகரத்து பெற்றதாக  கூறப்படுகிறது.

கணவன் கைவிட்டு சென்றதால், சாந்தி, தனது குழந்தைகளுடன் ஆர்.கே.பேட்டை அருகே தேவலம்பாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினார். அதன்பிறகு சக்தி விட்டு பிரிந்து தேவலம்பாபுரம் வந்து, சாந்தியை ரவி  2வது திருமணம் செய்துள்ளார். பின்னர், சாந்தி  மற்றும் அவரது குழந்தைகளுடன் விக்கி ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். சாந்தியின் மகள் 8ம் வகுப்பு படித்து வருகிறார். தனியாக குடும்பம் நடத்த தொடங்கிய சில  நாட்களிலேயே விக்கிக்கு, சாந்தியின் மகள் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. பின்னர், மாணவிக்கு விக்கி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 31ம் தேதி சாந்தியின் உதவியுடன் சிறுமியை வலுக்கட்டாயமாக விக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் பள்ளிக்கு செல்லாத சிறுமி நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று தலைமை  ஆசிரியையிடம் நடந்த விவகாரங்களை கூறி அழுதுள்ளாள். மேலும், வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்று கதறியுள்ளாள்.  இதுகுறித்த புகாரின்பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்தனர். பின்னர், இந்த வழக்கு திருத்தணி மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தது  தெரிந்தது. இதையடுத்து, சிறுமியின் தாய் சாந்தி மற்றும் கள்ளக்காதலன் விக்கி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: