சென்னை: கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (42). கார் டிரைவர். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வேலை முடிந்து கொடுங்கையூர் எழில் நகர் புதுபாலம் வழியாக செல்போன் பேசியபடி வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, பின்தொடர்ந்து வந்த 3 வாலிபர்கள் திடீரென சுப்பிரமணி வைத்திருந்த செல்போனை பறித்த கொடுங்கையூர் எழில் நகர் ஏ பிளாக்கை சேர்ந்த சூர்யா (18), எம்ஜிஆர் நகர் அண்ணாசாலையை சேர்ந்த பாஸ்கர் (18), அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். } தி.நகர் பகுதியில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட பாண்டிபஜார் பகுதியை சேர்ந்த வடை பிரகாஷ் (எ) பிரகாஷ் (23), நுங்கம்பாக்கம், புஷ்பாநகர் பகுதியை சேர்ந்த குமார்(19), ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 சவரன் நகைகள், 1 செல்போன் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.