ஆலந்தூர்: பரங்கிமலை இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் போலீசார் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஆலந்தூர் எம்.கே.என். சாலையில் தேவதாஸ் (54) என்பவரின் மளிகை கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை செய்வது தெரிந்தது. அவரது வீடு மற்றும் கடையில் பதுக்கி வைத்திருந்த 70 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தேவதாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.