சென்னை பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு: பாஜ இளைஞர் அணி அறிவிப்பு

சென்னை: சென்னையில் அமித்ஷா பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் 3 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று பாஜ இளைஞர் அணி அறிவித்துள்ளது.தமிழக பாஜ இளைஞர் அணியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் பி.செல்வம் தலைமை தாங்கினார். இதில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் நரேந்திரன், இளைஞர் அணி தேசிய பொதுச் செயலாளர் அபிதாஸ் மிஸ்ரா, துணை தலைவர் முருகானந்தம், மாநில பொதுச் செயலாளர் வசந்தராஜ் உள்பட இளைஞர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வினோஜ் பி.செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள 67,644 வாக்குசாவடிகளுக்கும் இளைஞர் அணி சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தொடர்ந்து வாக்குசாவடி அளவில் பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்படும். பாஜ இளைஞர் அணி சார்பில் ஜனவரி மாதம் சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளார். இதில் சுமார் 3 லட்சம் பேரை திரட்ட இலக்கு நிர்ணயித்து ஏற்பாடு நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: