நாங்கள் சீவலப்பேரி பாண்டியன் வாரிசுகள் சிறை எங்களுக்காக கட்டப்பட்டது: கருணாஸ் பேட்டி

சென்னை: சிறைச்சாலை எங்களுக்காகத் தான் கட்டப்பட்டுள்ளது என்று போலீசார் கைது செய்த போது நடிகர் கருணாஸ் ஆவேசமாக கூறினார்.  முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ் நேற்று காலை கைது செய்யப்பட்டபோது நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற உறுப்பினரான என்னை கைது ெசய்ய சபாநாயகரின் அனுமதி வேண்டும். ஆனால் என்னை கைது செய்ய சபாநாயகரிடம் காவல் துறை அனுமதி பெற்றதா  என தெரியவில்லை. இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கும் வகையில் பேசிய என் மீது, 307 சட்டப் பிரிவின் கீழ் வழக்கு போடக்கூடிய அளவிற்கு நான் என்ன  தவறு செய்தேன். அது குறித்து எனக்கு தெரிவிக்கவில்ைல. சட்டத்தை நாங்கள் மதிக்கிறவங்க, தமிழக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.  நாங்கள் துப்பாக்கியை பார்த்து ஓடக்கூடியவர்கள் இல்லை. துப்பாக்கிக்கு நெஞ்சை நிமிர்த்தி காட்டிய சீவலப்பேரி பாண்டியன் வாரிசுகள். சிறைச்சாலை  எங்களுக்காகத் தான் கட்டப்பட்டுள்ளது. ஜனநாயக அடிப்படை உரிமைகளை ஒரு ஜனநாயக சட்டமன்ற உறுப்பினராக நேரடியாக நீதிமன்றத்தில் சத்திக்க  தயாராக இருக்கிறேன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: