‘எம்டிய பாக்கனும்னா மட்டும் நீட்னஸா போக சொல்றீங்க’டிரைவர் சீட்டுல தண்ணி ஒழுகினா எப்படி பஸ்சை ஓட்ட முடியும்?
எல்லோருக்கும் வணக்கம். இந்த வண்டி எம்டிசி கண்ணகி நகர் பணிமனையில் ஓடுது. கண்ணகி நகர்-தாம்பரம் வழித்தடத்துல இந்த ஒரு வண்டி தான் ஓடுது. இந்த வண்டி மழை காலத்தில் எல்லா இடத்திலும் ஒழுகும். மெயினா, டிரைவர் சீட்டில் அதிகம் ஒழுகும். டிரைவர் சீட் இல்லாம, பயணிகள் யாரும் உட்கார முடியாத அளவுக்கு எல்லா இடத்திலும் ஒழுகும். இந்த மாதிரி டிரைவர் பக்கத்தில் தண்ணீர் ஒழுகுனா எப்படி வண்டி ஓட்டுறது. அதுமட்டுமில்ல, பப்ளிக் எதிர்ல இந்த மாதிரி ஒரு யூனிபார்ம் போட்டுட்டு போனா எப்படி மரியாத கிடைக்கும். எம்டிய பார்க்கனும்னா மட்டும், அட்மின் ஆபீசர பார்க்கனும்னா மட்டும் நீட்னஸா போக சொல்றாங்க. அதுக்கு கிளாஸ் வேற எடுக்குறாங்க. தோழர்களே இந்த வண்டிய பாருங்க, என் நிலைமைய பாருங்க. இந்த வண்டிக்கு தார்பாய் ஒட்ட 4 மாசமா சொல்லிட்டுருக்கேன். இப்படி இருந்தால் எப்படி வண்டி ஓட்டுறது. இவ்வாறு அந்த டிரைவர் வீடியோவில் பேசுகிறார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி