புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், மகன் அகிலேஷ் யாதவுடன் டெல்லியில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ். கடந்த ஆண்டு கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக கட்சியின் தலைவரும், முலாயமின் சகோதரருமான சிவ்பால் யாதவ் பிரிந்து சென்றார். சமாஜ்வாடி மதசார்பற்ற மோர்சா என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கியுள்ள அவர், தனது கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார். முலாயம் சிங் தனது சகோதரர் கட்சியின் இணைவாரா, மகன் அகிலேஷ் யாதவுடன் சேருவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.