பாக். தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீ நகர்: காஷ்மீரில் ஜெய்ஷ்  இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்திற்கு உட்பட்ட தர்கனி கண்ட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த ரகசிய தகவலின்அடிப்படையில், பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது  பதுங்கியிருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். சம்பவ இடத்தில் இருந்து ஆயுதங்கள், அமோனியம் உள்ளிட்டவை பறிமுதல்  செய்யப்பட்டன. துப்பாக்கி–்ச்சூட்டில் கொல்லப்பட்ட தீவிரவாதி பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் என தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் வீரர் ஒருவர் காயமடைந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: