ஐதராபாத்: ‘‘தெலங்கானாவில் முன்கூட்டி தேர்தல் நடத்தும் முடிவை எடுத்ததற்காக ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி வருந்துகிறது’’ என காங்கிரஸ் தலைவர் ஜெய்பால் ரெட்டி கூறி உள்ளார்.மக்களவை தேர்தலுடன் தெலங்கானா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க இருந்த நிலையில், ஆளும் டிஆர்எஸ் கட்சி சட்டப்பேரவையை கலைத்தது. அம்மாநிலத்தில் முன்கூட்டியே இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.இந்நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி கூறியதாவது:முன்கூட்டியே தேர்தல் நடத்தும் முடிவை அவசரப்பட்டு எடுத்துவிட்டோமா என டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் இப்போது வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அக்கட்சியே தற்போது பயத்தில் உள்ளது.