கருணாஸின் பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்தோம்: தமிமுன் அன்சாரி, தனியரசு கூட்டறிக்கை

சென்னை: கருணாஸை கைது செய்த போலீசார் இப்போதாவது எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும் என்று எம்எல்ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்எல்ஏ, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ, தன் கட்சி ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு சர்ச்சைக்குரியதாகி, அவரை கைதில் கொண்டு போய் நிறுத்தியிருக்கறது. அவரது பேச்சின் சில பகுதிகள் எந்த விதத்திலும் ஏற்க  முடியாதவை. அதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். வேதனையடைந்தோம்.நாங்கள்  கருணாஸை அலைப்பேசியில்  தொடர்புக் கொண்டு, உங்கள் கோரிக்கைகளை மட்டும் வலியுறுத்தி பேசிவிட்டு வந்திருக்கலாமே. அது தானே அரசியல் தர்மம் என்றெல்லாம் சுட்டிக்காட்டி, இதற்கு வருத்தம் தெரிவிக்க  சொன்னோம். அவர் அதை புரிந்து  ஏற்றுக் கொண்டார்.

இரண்டு முறை வருத்தங்களையும் ஊடகங்களின் வழியாக தெரிவித்துக் கொண்டார். இன்று அவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் காவல்துறை கைது செய்துள்ளது. இதை நாங்கள் ஒரு சட்ட நடவடிக்கையாக   பார்க்கிறோம். புரிந்துக் கொள்கிறோம்.அதே சமயம்   நீதிமன்றத்தையும், காவல்துறையையும் கொச்சைப்படுத்தி, கேவலமாக பேசிய எச்.ராஜா மீதும், பெண் பத்திரிகையாளர்களை  பற்றி அசிங்கமாக கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீதும் இதே போன்ற  நடவடிக்கையை எடுத்திருந்திருக்க வேண்டும்.இதே கேள்வியை தமிழகத்தில் பலரும் கேட்கிறார்கள். எனவே அவ்விருவர் மீதும் இப்போதாவது தமிழக அரசு உறுதியான சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழக அரசு  சமூக நல்லிணக்கத்தை காக்கவும், அமைதியை நிலை நாட்டவும் பாராபட்சமின்றி செயல்பட வேண்டும் என   கேட்டுக் கொள்கிறோம். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: