சென்னை: ரபேல் போர் விமானம் வாங்க போடப்பட்ட ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனம் லாபம் பெற மோடி செய்த சதி என அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக, அறப்போர் இயக்கம் சார்பில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் செய்தியாளர்களை சந்திது கூறியதாவது: இந்திய விமானப்படைக்கு 126 போர் விமானங்கள் தேவைப்பட்டது. இதனையடுத்து பிரான்ஸ் நாட்டுடன், இந்தியா ரூ.90 ஆயிரம் கோடி மதிப்பில் பறக்கும் நிலையில் உள்ள 18 விமானங்களும், 108 விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும்படியும் ஒப்பந்தம் போடப்பட்டு நிலுவையில் இருந்தது. இதற்கு டசால்ட் ஏவியேசன் நிறுவனமும், எச்.ஏ.எல் நிறுவனமும் கூட்டு தயாரிப்பில் ஈடுபட இருந்தது. இந்தநிலையில் 126 விமானத்துக்கு போடப்பட்டிருந்த ஒப்பந்ததை ரத்து செய்து, கடந்த 2015 ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி, பிரான்ஸ் அரசிடம் இருந்து முழுவதும் தயாரிக்கப்பட்டு பறக்கும் நிலையில் உள்ள 36 போர் விமானங்களை, ஒரு விமானம் 16 ஆயிரத்து 60 கோடி மதிப்பில் வாங்குவதாக ஒப்பந்தம் செய்தார்.