ஊழியர்களுக்குள் வேலை செய்வதில் மோதல் சபாநாயகர் வீட்டு வேலைக்கார பெண் தற்கொலை முயற்சி: ஆர்.ஏ.புரத்தில் பரபரப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் ஒருவர் அதிகளவில் மாத்திரைகளை சாப்பிட்டு  தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஆர்.ஏ.புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் நீதிபதிகள், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பு ஒன்றில் தமிழக  சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் வசித்து வருகிறார். இவரது வீட்டில் 5க்கும் மேற்பட்டோர் வீட்டு வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ேநற்று  முன்தினம் தனபால் வீட்டில் வேலை செய்யும் தீபா(30) என்பவர் சக பெண் ஊழியருடன் வேலை செய்வதில் கருத்து வேறுபாடு மோதலில் முடிந்ததாக  கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சக ெபண் ஊழியர் தீபாவை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த  தீபா சபாநாயகர் தனபால் வீட்டில் இருந்த பயன்படுத்தாத பழைய மாத்திரைகளை எடுத்து திடீரென வாயில் போட்டு விழுங்கினார். அடுத்த சில மணிநேரத்தில் திடீரென  தீபா கீழே மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், தீபாவை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர். உரிய நேரத்தில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததால் அவர் உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அபிராமபுரம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தீபா கூறியதாக போலீசார்  தெரிவித்ததாவது, ‘ சக ஊழியர்களுக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாக பயன்படாத மாத்திரையை சாப்பிட்டுள்ளார். ஆனால் அது ஆபத்தான மாத்திரை இல்லை.  உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்ததால் அவர் தற்ேபாது நலமுடன் உள்ளார். அவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்பது குறித்து  மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் ஆனதும் விசாரிக்க உள்ளோம் என்றனர்.சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் வீட்டில் வேலை செய்யும் ெபண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: