தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் ஒருசில இடங்களில் இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ்  வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் முசிறி, சேலம் மாவட்டம் ஏற்காட்டு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழையும், மதுரை மாவட்டம் சித்தாம்பட்டியில் 4  செ.மீ, மழையும்,  கரூர் மாவட்டம் குளித்தலை 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: