சென்னை: எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறு கண்ணில் வெண்ணெய் வைத்து பார்க்கும் அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுப்பதும் ஒரு சிலரை கண்டுகொள்ளாமல் இருப்பதும் ஏற்கமுடியாது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.