தமிழகம், புதுச்சேரியில் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், ஒருசில இடங்களில் இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராசிபுரம் -7 செ.மீ, சித்தாம்பட்டி - 4 செ.மீ, குளித்தலை 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: