சென்னை: கருணாஸை கைது செய்த போலீஸ் எச்.ராஜாவை கைது செய்யாததற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என முத்தரசன் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு எடுப்பிடி ஆட்சியை தான் எடப்பாடி அரசு நடத்துகிறது என முத்தரசன் தெரிவித்தார்.