காவல்துறை மற்றும் முதல்வரை அவதூறாக பேசிய விவகாரம் : MLA கருணாஸ் கைது

சென்னை: நடிகரும் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக காவல்துறையை நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் அவதூறாக பேசியிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் யூ டியூப் மற்றும் பிற பிரபல சமூக வலைதளங்களில் பரவின. இதனையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கருணாஸ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: