எம்எல்ஏக்கள் மாயமாகவில்லை : அமைச்சர் ரேவண்ணா மறுப்பு

பெங்களூரு:  எம்எல்ஏக்கள் 35 பேர் கூட்டத்தில் பங்கேற்றதாக அமைச்சர் ரேவண்ணா நேற்றிரவு பேட்டிய அளித்தார். மஜத எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 20 பேர் வராதது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் தன்னிடம் கூறிவிட்டு வெளியூர் சென்றதாக முதல்வர் குமாரசாமி விளக்கம் அளித்தார். இருப்பினும் மற்ற எம்எல்ஏக்கள் பற்றிய விவரம் தெரியவில்லை. இந்நிலையில் அமைச்சர் ரேவண்ணா நேற்றிரவு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: மஜத கூட்டத்தில் 20 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என ஊடகங்களில் பரவியது. இது தவறான தகவல். ஹாசனில் கூட்டம் நடந்ததால் தான் குறித்த நேரத்தில் எம்எல்ஏக்களால் வந்து சேர முடியவில்லை. 37 எம்எல்ஏக்களில் 35 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். 2 எம்எல்ஏக்கள் அவர்கள் சொந்த வேலை காரணமாக வர இயலவில்லை என்ற தகவலை எங்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தனர் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: