சென்னை: சரத்பவார் மகள் சுப்பிரியா சுலே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து பேசினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே நேற்று சென்னை வந்தார். அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். அப்போது, திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டமைக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி உடனிருந்தார்.