இமாச்சலில் பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து 13 பேர் பலி

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலியாகினர்.இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லா மாவட்டத்தில் உள்ள ஸ்வாரா பகுதியில் இருந்து தியூனி நோக்கி வாகனம் ஒன்று நேற்று சென்றது. இதில், 13 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில், வாகனம் சனைல் பகுதியில் சென்றபோது திடீரென ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதுபற்றி அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு ரோக்ரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி  மூன்று பேரும் இறந்தனர். இறந்த அனைவரும் 3 குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களில் ஒரு சிறுமி, 3 தம்பதிகளும் அடங்குவர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: