வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன் மற்றும் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி ஆகியோரை வழக்கறிஞர் புகழேந்தி நேற்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ‘நளினி, முருகன், சாந்தன் ஆகியோர், தமிழக கவர்னர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எங்களது விடுதலை தொடர்பாக அவர் விரைவில் நல்ல முடிவெடுப்பார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என தெரிவித்தனர். இவ்வாறு புகழேந்தி கூறினார்.