அவனியாபுரம்,: மதுரையில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் நேர்மறையான அரசியல் இல்லை. எதிர்மறையான அரசியலே நடக்கிறது. பண மதிப்பிழப்பு இந்தியாவை செம்மைப்படுத்தி இருக்கிறது. திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் பாஜ போட்டியிட விரும்புகிறது. தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் ஆள் பலம், பண பலம், படை பலம் இன்றி தேர்தல் நடந்தால் நல்லது. நேர்மையாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது ஆசை. பெட்ரோல் விலையை கட்டுப்பாட்டில் கொண்டு வர பாஜ அரசு விரும்புகிறது. ஊழல் புகாரில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என யார் சிக்கினாலும், அவர்கள் வழக்குகளை சந்திக்கட்டும் என்றார்.