ராமநாதபுரம் அருகே கபடி போட்டியில் வீரர் திடீர் மரணம்

ராமநாதபுரம்,: ராமநாதபுரம் அருகே வெண்குளம் களரி கொடிக்குளத்தில் 3 கிராமத்தினர் சேர்ந்து நேற்று 3வது ஆண்டாக கபடி போட்டி நடத்தினர். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 35 அணிகள் கலந்து கொண்டன. நேற்று மாலை ராமநாதபுரம், வெண்குளம் அணிகள் மோதின. ஆட்டம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தபோது, வெண்குளம் அணிக்காக விளையாடிய  கடலூர் மாவட்டம், பண்ருட்டி காட்டுகூடலூரை சேர்ந்த அருணாசலம் மகன் சூர்யா (21) திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சூர்யாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இறந்த சூர்யா பெற்றோருக்கு ஒரே மகன். பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: