கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றி 2-வது திருமணம் செய்ய முயன்றவர் கைது

சென்னை: பெரம்பூர் மடுமாநகர் சொக்கலிங்கம் தெருவில் வசிப்பவர் சூசைஆரோக்கியம் (27), மனைவி ஷாலினி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சூசைஆரோக்கியத்துக்கும், சைதாப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் நேற்று முன்தினம் திருவான்மியூரில் திருமணம் நடைபெற இருந்தது.இதுகுறித்து அவரது மனைவி ஷாலினி அளித்த புகாரின் பேரில், திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். விசாரணையில், சூசை ஆரோக்கியம் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து மாணவியை காதலித்து, 2வது திருமணம் செய்ய முயன்றது தெரிந்தது.கடந்த 2014ம் ஆண்டு இதுபோல், சூசைஆரோக்கியம் தனது முதல் திருமணத்தை மறைத்து வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய முயன்றபோது போலீசாரால் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்தனர்.

 புது  பெருங்களத்தூர் புத்தர் நகர் 6வது தெருவை சேர்ந்த கல்லூரி மாணவன் ஹரிஹரன் (18) என்பவரை, சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தபோது, அவரிடம் 900 கிராம் கஞ்சா இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 சித்தாலப்பாக்கம் ஜெயா   நகரை சேர்ந்த மோகனசுந்தரவள்ளி (66),என்பரிடம் பைக் ஆசாமிகள் 5 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினர்.

 திருமுடிவாக்கம் இரும்பு  குடோனில் கடந்த 16ம் தேதி 500 கிலோ காப்பர்  திருடிய  கேளம்பாக்கத்தை சேர்ந்த ஜான்ராஜ் (27), அசாம் மாநிலத்தை சேர்ந்த  டேக்  பகதூர் சட்டர்ஜி (23), அனில் (22), அப்தர்அலி (23), பிஜுல்மோரன்  (22),  தன்போறா (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 திரு.வி.க.நகர் மணவாள நகரை சேர்ந்த ஜமால்லாசர் (35) என்பவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், 17 சவரன் நகை, ₹50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

 கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆந்திர  மாநிலம், சித்தூரை சேர்ந்த கல்பனா (42) என்பவர் பையில் இருந்த 11 சவரன் நகை கொள்ளைபோனது.

 பெரவள்ளூரை சேர்ந்த செண்பகவல்லி (81) என்பவரிடம் கேபிள் டிவி ஆபரேட்டர் போல் நடித்த மர்ம நபர் 5 சவரன்  நகையை பறித்துச் சென்றாார்.

 கோயம்பேடு பஸ்  நிலையத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த சிந்தாமணி,  பள்ளிக்கரணையை சேர்ந்த மோகன சுந்தரவல்லி ஆகியோரிடம் தலா 5 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது.

 நொச்சிகுப்பம் எல்லையம்மன்   கோயில் தெருவை சேர்ந்த பாரதி (43), நேற்று முன்தினம் இரவு வீட்டின்   கதவை திறந்து வைத்து தூங்கியபோது, வீட்டில் இருந்த ₹25 ஆயிரம், 2 செல்போன், ஒரு ஜோடி ெகாலுசு கொள்ளை போனது.

 கொளத்தூர் விவேகானந்தா மெயின்ரோட்டை சேர்ந்த பள்ளி ஆசிரியை ரமா பொன்கற்பகம் (32), என்வரின் கழுத்தில் கிடந்த 7 சவரன் செயினை மர்ம நபர் பறித்து சென்றார்.

 அம்பத்தூர் மண்ணூர்பேட்டையை சேர்ந்த கவிதா (30), என்பவரது  வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், பீரோவில் இருந்த 5 சவரன் நகைகள், ₹20 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

 கொடுங்கையூர் எழில்நகரை சேர்ந்தவர் கேசவன் (25), நேற்று கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே பைக்கில் சென்றபோது, குப்பை லாரி மோதி இறந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: