×

கருணாஸ் கட்சி நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

சென்னை: முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கடந்த 16ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசினார். அப்போது, தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தனை கடுமையாக விமர்சித்தார். அவர் மீது 7 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அவரது கட்சியை சேர்ந்தவர் தி.நகர் காவல் மாவட்டம் முழுவதும் தமிழக அரசினையும், காவல் துறையினரையும் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளார். இதைப் பார்த்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், அனுமதியின்றி எப்படி போஸ்டர் ஒட்டினர். போலீசார் இரவு ரோந்து செல்லவில்லையா? என போலீசாரை உயர் அதிகாரிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். மேலும், அதிகாரிகள் உத்தரவு படி போலீசார் வீதிவீதியாக மோட்டார் சைக்கிளில் சென்று போஸ்டரை கணக்கெடுத்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karunas, Poster
× RELATED மண்பாண்டம் தொழில் செய்பவர்கள் குளம்,...