கணவரை பிரிந்து தனியாக வசிக்கும் பெண்ணை குடும்பம் நடத்த வற்புறுத்திய வாலிபர் கைது

ஆவடி: ஆவடி அடுத்த அயப்பாக்கம், ஐயப்பன் நகரை சேர்ந்தவர் சுமதி (33). கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 8 ஆண்டாக 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கோயமுத்தூர் மருதமலை சாலை லிங்கனூர் கிராமத்தை சேர்ந்த சுனில் (28) என்பவருக்கும், சுமதிக்கும் இடையே பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் பேஸ்புக்கில் நெருங்கி பழகியுள்ளனர். அப்போது சுமதி கணவரை பிரிந்திருப்பது சுனிலுக்கு தெரிய வந்ததால் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கூறியுள்ளார். இது பிடிக்காததால் சுமதி சமீபகாலமாக சுனிலுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுனில் சுமதி வீட்டுக்கு வந்து, தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு சுமதியை தாக்கியுள்ளார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுனிலை மடக்கி பிடித்து திருமுல்லைவாயல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: