சென்னை: தேசிய நெடுஞ்சாலை அலகில் தரமாக பணிகள் நடக்கிறதா என்பதை கண்காணிக்க முதன்முறையாக தரக்கட்டுபாட்டு பிரிவு ஏற்படுத்தி இருப்பது நெடுஞ்சாலைத்துறையில் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் 5324 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளது. இதில், மாநில அரசு கட்டுபாட்டில் 2.39 கி.மீ, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுபாட்டில் 3285 கி.மீ சாலைகளும் உள்ளது. இந்த சாலைகளின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் நான்கு வட்டங்கள், கோட்ட பொறியாளர்கள் தலைமையில் எட்டு கோட்டங்கள் உள்ளது. இந்த அலகின் மூலம் சாலை மேம்படுத்துதல், பாலங்கள் கட்டுதல், சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கிறது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் பணிகள் நடக்கிறது. இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் 8 ேகாட்டங்கள் மட்டுமே இருப்பதால் தமிழக முழுவதும் நடக்கும் சாலை பணிகளை கண்காணிப்பதில் சிக்கல் எழுகிறது. இதனால், சாலை பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.