புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வந்த 3,000 டின் பீர் பறிமுதல் : 2 பேர் கைது

சென்னை: புதுச்சேரியில் இருந்து செங்கல்பட்டு வழியாக மதுபானம் கடத்தப்படுவதாக செங்கல்பட்டு, மதுராந்தகம் போலீசாருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் 3 ஆயிரம் டின் பீர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவை புதுச்சேரில் இருந்து கடத்தி வந்து பூந்தமல்லியில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து காரில் வந்த பூந்தமல்லியை சேர்ந்த பரமசிவம் (40), தர் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், பறிமுதலான பீர்கள், மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: