சென்னை: ரபேல் விமான விவகாரத்தில் பிரதமர், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க புலன் விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழக அரசின் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரி ஆளுநரை விரைவில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யாவிட்டால், தமிழக அரசு மீது நம்பகத்தன்மை போய்விடும் என திருமாவளவன் கூறினார்