திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி மேலத்தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி என்பவரது மகன் முருகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 29 வயது பொறியியல் பட்டதாரியான இவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. வங்கி தேர்வு, அரசு தேர்வு எழுதியும் ஒரு சில மதிப்பெண் வித்தியாசத்தில் வாய்ப்பு பறி போனதாக கூறப்படுகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த முருகன் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.