காஷ்மீர்: பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி தரப்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். நமது வலியை எதிரிகள் உணரும் வகையில் தகுந்த பதிலடி தரப்படும் என அவர் கூறியுள்ளார். ராணுவத்திற்கு நவீன ஆயுதங்கள் தேவைப்படுவதாக பிபின் ராவத் தெரிவித்தார்.