ஜம்மு: ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வறிக்கையில் 2015ஆம் ஆண்டுவரை பாகிஸ்தான் தான் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மூன்றாவது நாடாக இருந்தது. இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களில் 53 சதவீதம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.