வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மினி லாரியில் சென்னைக்கு குட்கா பொருட்களை கடத்திச்சென்ற ஓட்டுநர் பாபு என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.