கைதியிடம் லஞ்சம் பெற்று சலுகை வழங்கிய வார்டன் மத்திய சிறைக்கு மாற்றம்: ராசிபுரம் கிளைச்சிறையில் பரபரப்பு

சேலம்: ராசிபுரம் கிளைச்சிறையில் விடுமுறை நாளில் கைதியின் உறவினர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, பொருட்களை வழங்கிய வார்டன் மத்திய சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், கிளைச்சிறை செயல்பட்டு வருகிறது. மொகரம் பண்டிகையையொட்டி, நேற்று அரசு விடுமுறையாகும். இதனால் சிறையில் இருக்கும் கைதிகளை உறவினர்கள் பார்க்க முடியாது. இந்நிலையில், ராசிபுரம் கிளைச்சிறையில் கைதியாக இருக்கும் சிறுவன் பார்க்க அவரது உறவினர்கள் 2 பேர் நேற்று வந்திருந்தனர். அரசு விடுமுறை நாளையும் மீறி, முதல் தலைமை காவலரான முருகேசன், பணத்தை பெற்றுக்கொண்டு, அவர்கள் கொண்டு வந்த பொருட்களை வாங்கி சென்றதாக புகார் எழுந்தது.

இந்த விவகாரம் தெரியவந்ததையடுத்து சேலம் மத்திய சிறையின் கட்டுப்பாட்டு அதிகாரியான ஆண்டாள், நேற்று ராசிபுரம் கிளைச்சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார். வார்டன்கள், கைதிகள் அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து முதற்கட்டமாக, புகாருக்கு ஆளான முதல்தலைமை காவலர் முருகேசனை, சேலம் மத்திய சிறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: