சேலம்: ராசிபுரம் கிளைச்சிறையில் விடுமுறை நாளில் கைதியின் உறவினர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, பொருட்களை வழங்கிய வார்டன் மத்திய சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், கிளைச்சிறை செயல்பட்டு வருகிறது. மொகரம் பண்டிகையையொட்டி, நேற்று அரசு விடுமுறையாகும். இதனால் சிறையில் இருக்கும் கைதிகளை உறவினர்கள் பார்க்க முடியாது. இந்நிலையில், ராசிபுரம் கிளைச்சிறையில் கைதியாக இருக்கும் சிறுவன் பார்க்க அவரது உறவினர்கள் 2 பேர் நேற்று வந்திருந்தனர். அரசு விடுமுறை நாளையும் மீறி, முதல் தலைமை காவலரான முருகேசன், பணத்தை பெற்றுக்கொண்டு, அவர்கள் கொண்டு வந்த பொருட்களை வாங்கி சென்றதாக புகார் எழுந்தது.