×

கச்சத்தீவை மீட்க போராடியது பாஜதான்: தமிழிசை அறிக்கை

சென்னை: தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை: கச்சத்தீவை மீட்க நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் அன்றைக்கே போராடியது பாஜவினர்தான் என்பதை உணருங்கள். 1980களிலேயே மதுரை மாநாட்டில் இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு கூறியவர் எங்கள் தலைவர் வாஜ்பாய்.  நான் கல்லூரியில் படிக்கும் போதே மாணவியாக இலங்கை தமிழர்களுக்காக  களத்தில் இறங்கி போராடியவள். கத்தில் இருந்து தேயிலை தோட்ட வேலைக்கு சென்ற  மலையக இலங்கை தமிழர்களின் துயரம்  குறித்து தமிழக அரசியல் கட்சிகள் இன்றுவரை ஒரு சிறு துரும்பையும் கிள்ளி போடாத நிலையில், எங்கள் பாஜ அரசுதான் அவர்களுக்கு தேவையான உரிமைகளையும், அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தந்திருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fellowship, bjp, Tamilisai
× RELATED பாஜக ஆளும் மாநிலங்களில் 6 மாதங்களில் 4...