சென்னை: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் என கூறி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றவரை கட்சியிலிருந்து நீக்கி திருநாவுக்கரசர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மண்ணிவாக்கத்தை அடுத்த வாலாஜபாத் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகம்மது இஸ்மாயில். தமிழ்நாடு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக எக்காலத்திலும் அறிவிக்கப்படவில்லை. அவர் தன்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் என்று கூறிக் கொண்டு தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக கருத்துக்களை தெரிவித்து செயல்பட்டு வருகிறார்.