பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது

சென்னை: சிந்தாதிரிபேட்டையை சேர்ந்தவர் ராணி (12). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 8ம் வகுப்பு மாணவி. ராணியின் தாய் இரண்டாவது திருமணம் செய்து தனியாக சென்று விட்டார். தற்போது ராணி தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள கடைக்கு  சென்ற ராணியிடம், குடிபோதையில் இருந்த அதேபகுதி கார் டிரைவர் செல்வம் (36) என்பவர் பேசுவது போல் ரிக்‌ஷா ஸ்டாண்ட் ஓரமாக அழைத்து பாலியல் தொல்லை செய்துள்ளார். தப்பிய ராணி பாட்டியிடம் தெரிவித்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டை போலீசில் ராணியின் பாட்டி செல்வம் மீது புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் செல்வத்தை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: