மனித உரிமை ஆணையத்தில் முறைகேடு புகார் அளித்த ஆசிரியர் சஸ்பெண்ட்

சென்னை: கலை ஆசிரியர் நல சங்க நிர்வாகிகள் சென்னையில் நேற்று கூறியதாவது: கலை ஆசிரியர் நல சங்கத்தை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஏ.எஸ்.ராஜ்குமார் நீலகிரி மாவட்டம் எருமாடு அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர். இவர் விடுப்பு எடுத்து கடந்த 27ம் தேதி,  மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 6ம் தேதி அவர் விடுப்பில் இருந்தபோது, உரிய அனுமதி பெறாமல் பள்ளிக்கு வராமல் இருந்ததாக கூறி செப்டம்பர் 7ம் தேதி முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒரு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் குறிப்பிட்ட புகார் தொடர்பாக மெமோ கொடுக்க வேண்டும். அப்படி இருக்கையில், விதிகளுக்கு மாறாக பணிநீக்கம் செய்துள்ளனர். இவ்வாறு கலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: