பள்ளி வேனில் 3 வயது குழந்தை பாலியல் கொடுமை: ஒருவர் கைது

போபால்: மத்தியப் பிரதேசத்தில் பள்ளி வேனில் சென்ற 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.  மத்தியப் பிரதேச மாநிலம், அயோத்தி நகரை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை அந்த பகுதியில் இருந்த பாலர் பள்ளியில் படித்து வருகிறது. பள்ளிக்கு சொந்தமான வேனில் குழந்தை தினந்தோறும் பள்ளி சென்று வருகிறது. நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் குழந்தை வீடு திரும்பியது. அப்போது, வாகனத்தில் இந்த நடத்துனர்  குழந்தையிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். வீட்டிற்கு வந்த சிறுமி இது குறித்து தாயிடம் தெரிவித்தது. குழந்தையிடம் விசாரித்தபோது வேன் நடத்துனரின் பெயரை குழந்தை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், சம்பந்தப்பட்ட நடத்துனரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவருக்கு வயது 17.

மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு தான் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: