போபால்: மத்தியப் பிரதேசத்தில் பள்ளி வேனில் சென்ற 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம், அயோத்தி நகரை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை அந்த பகுதியில் இருந்த பாலர் பள்ளியில் படித்து வருகிறது. பள்ளிக்கு சொந்தமான வேனில் குழந்தை தினந்தோறும் பள்ளி சென்று வருகிறது. நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் குழந்தை வீடு திரும்பியது. அப்போது, வாகனத்தில் இந்த நடத்துனர் குழந்தையிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். வீட்டிற்கு வந்த சிறுமி இது குறித்து தாயிடம் தெரிவித்தது. குழந்தையிடம் விசாரித்தபோது வேன் நடத்துனரின் பெயரை குழந்தை தெரிவித்துள்ளது.