கொள்ளை முயற்சி உபி. வங்கியில் 2 காவலாளிகள் படுகொலை

நொய்டா: உத்தர பிரதேசத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கொள்ளை முயற்சியின்போது காவலாளிகள் இருவர் தாக்கி கொல்லப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் செக்டார் 1 பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வட்டார அலுவலக கிளை உள்ளது. இங்கு நேற்று காலை தனியார் நிறுவனத்தை சேர்ந்த 2 காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதத்தால் 2 காவலாளிகளின் தலையிலும் தாக்கினர். இதில் மயங்கி விழுந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் காவலாளிகள் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் அங்கிருந்த காவலாளிகளை தலையில் தாக்கி கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மர்ம நபர்களை ேபாலீசார் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: