தமிழகத்தை சேர்ந்த மேசைப்பந்து விளையாட்டு பயிற்சியாளருக்கு துரோணாச்சாரியார் விருது : முதல்வர் வாழ்த்து

சென்னை: துரோணாச்சாரியார் விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த மேசைப்பந்து விளையாட்டு பயிற்சியாளருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு:தமிழ்நாட்டைச் சேர்ந்த மேசைப்பந்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளரான ஹ.சீனிவாச ராவுக்கு மத்திய அரசு துரோணாச்சாரியார் விருது வழங்கியதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு அனுப்பிய வாழ்த்து கடிதத்தின் விவரம்: சர்வதேச அளவில் பல்வேறு மேசைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து, இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வீரர், வீராங்கனைகளை உருவாக்கிய தங்களுக்கு இந்திய அரசு துரோணாச்சாரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் மேசைப்பந்து போட்டிகளில் மேன்மேலும் பல பயிற்சியாளர்களை உருவாக்கி, சாதனை படைத்திட எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து

தமிழகத்தைச் சேர்ந்த மேசைப்பந்து விளையாட்டு வீரர் சத்யன் அர்ஜூனா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்குப் பெருமையாக இருக்கிறது. இவர் தனது கடின உழைப்பால், தொடர் முயற்சியால் சர்வதேச அளவில் மேசைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று தமிழகத்தின் பெருமையை நாடறியச் செய்திருக்கிறார். இவரது விளையாட்டுக்கு ஆதரவாக இருந்து, பயிற்சி கொடுத்த பயிற்சியாளருக்கும், துணை நின்ற பெற்றோர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். தமிழக அரசு வீரர் சத்யனுக்கு மரியாதை செய்து, பரிசுகள் வழங்கி விளையாட்டில் ஊக்கப்படுத்த வேண்டும். தமிழக வீரர் தொடர்ந்து மேசைப்பந்து போட்டியில் கலந்துகொண்டு மேலும் பல விருதுகளைப் பெற்று தமிழகத்திற்கும், நாட்டிற்கும் உலக அளவில் பெருமைத் தேடித்தர வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: