தமிழறிஞர் பச்சையப்பன், திருவாரூர் செல்வகணபதி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை,:  திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,தனிச்சிறப்பு வாய்ந்த தமிழறிஞரும், மொழிப்போராட்ட வீரருமான கீ.த.பச்சையப்பன் 84வது வயதில் மறைவடைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். வழக்கு ஒன்றிற்காக உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, செந்தமிழ்ப்புலவர் மரணமடைந்துள்ளார். அவர் மறைந்தாலும் தமிழ்மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டு என்றென்றும் உயிர்த்துடிப்புடன் வாழும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் திமுக சார்பில், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.கருணாநிதியின் இளமைக்காலம் தொட்டு உற்ற நண்பராக விளங்கியவரும், புகழ்பெற்ற தனித்துவம் வாய்ந்த பாரி நாதசுரம் இசைப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவரும், திருவாரூர் கு.தென்னன் சகோதரரும், அரிய கலைஞருமான திருவாரூர் கே.செல்வகணபதி 94ம் வயதில் மறைவுற்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. கே.செல்வகணபதியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர்தம் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் திமுக சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: