மானாமதுரை அருகே விஷம் வைத்து 50 மயில்கள் கொலை

மானாமதுரை: விஷம் வைத்து 50 மயில்கள் கொல்லப் பட்ட சம்பவம் மானா மதுரை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் இருந்து கள்ளர்வலசை கிராமத்திற்கு செல்லும் ஆற்றுப்பகுதிகளில், ஏராளமான மயில்கள் துடிதுடித்தபடி கிடந்தன. அப்பகுதியில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த விதைநெல்லை மயில்கள் உண்டு வந்திருக்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நேற்று முன்தினம் இரவு மயில்கள் வரும் வயல்களில் குருணை மருந்தை நெல்லுடன் கலந்து வைத்து விட்டு சென்றுள்ளனர்.  நேற்று இரை தேட வந்த 50க்கும் மேற்பட்ட மயில்கள் விஷ நெல்லை தின்று, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து துடிதுடித்து இறந்து கிடந்துள்ளன. இத்தகவல் கிராமத்திற்குள் பரவியதால் அதிர்ச்சியடைந்த மர்ம நபர்கள் யாருக்கும் தெரியாமல் மயில்களை எடுத்து குழி தோண்டி புதைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: