தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பஞ்சலதுணை கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தமல்லையா(62). விவசாயியான இவர், தன்னுடைய விவசாய நிலத்தில் ராகி, நிலக்கடலை பயிரிட்டுள்ளார். தற்போது, மழை பெய்து வருவதால் நிலக்கடலை அறுவடை பருவத்தில் உள்ளது. வனப்பகுதியையொட்டிய கிராமம் என்பதால் இரவு நேரங்களில் விலங்குகள் நிலத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. நிலக்கடலை பயிரை காட்டுப்பன்றி கூட்டத்திடமிருந்து காப்பாற்ற சித்தமல்லையா, நிலத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைத்துள்ளார். இரவு நேரத்தில் அருகில் உள்ள மின்கம்பத்தில் கொக்கி போட்டு திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து கம்பிவேலியில் பாய்ச்சி வந்துள்ளார்.